ஒலியின் உதயம்
தொடர்ந்து
ஓசை சிலும்பி உயர்ந்து
எழுந்து சிறகடித்தது
காற்று அதைப் பனைமரக்காடுகளில்
கொண்டு சென்றபின்
ஓலையில் பதிந்து
எழுத்தின் மேனி
பதிந்தது உருவாய்
எழுத்தும் ஓசையும்
இணைந்து நடனமாடின
நாவெல்லாம்
எழுத்துக்கு ஏது
ஓசை எனக்கேட்டவர்
கண் விழித்தனர்.