Thursday, January 17, 2013

எழுத்தோசை

எழுத்தோசை  
ஒலியின்  உதயம்
தொடர்ந்து
ஓசை சிலும்பி உயர்ந்து
எழுந்து  சிறகடித்தது
காற்று அதைப் பனைமரக்காடுகளில்
கொண்டு  சென்றபின்
ஓலையில்  பதிந்து
எழுத்தின் மேனி
பதிந்தது உருவாய்
எழுத்தும் ஓசையும்
இணைந்து நடனமாடின
நாவெல்லாம்
எழுத்துக்கு ஏது
ஓசை எனக்கேட்டவர்
கண் விழித்தனர்.

எதை விட்டுவிட்டுப்போகிறோம் ?

எதை  விட்டுவிட்டுப்போகிறோம் ?
எதையாவது  விட்டுவிட்டோ மா என்று
வீட்டைக் காலி செய் யும் முன்
ஒரு சாமான் பாக்கி விடாமல்
லாரியில் ஏற்றியானபின்னும்  மீண்டும்
மீண்டுமென அறை அறையாகத்
திரும்பி வந்து தேடினால்
வெறிச்சோடிய வீடு பேசுகிறது
ஆயிரம் கதைகள் ..ஆயிரம் மௌனமொழிகள்
ஆயினும் விடைபெறத்தான் 
வேண்டிவருகிறது
எல்லாவற்றையும் அங்கேயே  விட்டுவிட்டு.

ஊசலாட்டம்

ஊசலாட்டம்
அச்ச த்தை அறுத்தெறிந்தவன்
கயிற்றின் மீது நடக்கின்றான்.
ஒரு கை விட்டு மறு கை
வளையம் தாவி வளையம்
பற்றி அந்தரத்தில் அவன்
தொங்கியாடும் ஊச லாட்டம்.
முயற்சி என்ற முத்திரை குத்தி
பயிற்சி என்று பெயர் வாங்கி
பக்குவம் கைவசமாகிறது.
அதுவாஇதுவா
இடமா வலமா
நாடா வீடா
நானா நாமா
அச்சம் என்பது
ஆறாத அவாவின்
மிச்சம் மீதி
அச்சத்தை அறுத்தெறி
 ஊசலாட்டம்
அறுந்தேபோகும் வாழ்ந்து காட்டினான்
சித்தார்த்தன்
வாக்கில் காட்டினார்
மௌனி மாணவர்
தாயுமானவர்.