(தேதி குறிக்கப்பட்ட வனம் - கவிதைத்தொகுதி)
மாயா
மாயா வரும்போது
கிழக்கு வெளுத்துவிடும்
மாயா புறப்படும்போது
மேற்கு கறுத்திருக்கும்
நட்சத்திரங்கள் முளைத்தனவா என்று
அலட்சியமான ஓரப்பார்வையோடு
பார்த்தபடி அகலும்போது எதறகு
இப்படி ஒரு மண்ணுக்கும் உதவாமல்
இந்த ஜனம் முட்டி மோதி
மாளுகின்றது என்று
கேலி அனுதாபம்
அவள் உதட்டில் பூக்கும்
மாயா ஒரு தமிழ் தெலுங்கு
மலையாள இந்தி நடிகையல்ல
சகல மாயைகளின் தாய் அவள்
உறங்க முயன்றும்
உறக்கத்திற்கு உரிய
உத்திகளைத் தேடியும் தவிக்கிற
அனைவரையும் அவள் அறிவாள்
சற்று சற்று நின்று
கவனித்துவிட்டுத் தான் போகிறாள்
உறங்கி விழித்து மீண்டும்
உபத்திரவங்களையே சந்திக்கப்போகிற
அவர்களை நினைத்து
அவளது இதழோரம் நெளிகிறது
உறங்கியும் விழித்தும்
பிறந்தும் இறந்தும்
அறியாத அவளுக்கு
எப்படிப் புரியும்
மாயை தரும் வேதனை?
வையவன்
மாயா
மாயா வரும்போது
கிழக்கு வெளுத்துவிடும்
மாயா புறப்படும்போது
மேற்கு கறுத்திருக்கும்
நட்சத்திரங்கள் முளைத்தனவா என்று
அலட்சியமான ஓரப்பார்வையோடு
பார்த்தபடி அகலும்போது எதறகு
இப்படி ஒரு மண்ணுக்கும் உதவாமல்
இந்த ஜனம் முட்டி மோதி
மாளுகின்றது என்று
கேலி அனுதாபம்
அவள் உதட்டில் பூக்கும்
மாயா ஒரு தமிழ் தெலுங்கு
மலையாள இந்தி நடிகையல்ல
சகல மாயைகளின் தாய் அவள்
உறங்க முயன்றும்
உறக்கத்திற்கு உரிய
உத்திகளைத் தேடியும் தவிக்கிற
அனைவரையும் அவள் அறிவாள்
சற்று சற்று நின்று
கவனித்துவிட்டுத் தான் போகிறாள்
உறங்கி விழித்து மீண்டும்
உபத்திரவங்களையே சந்திக்கப்போகிற
அவர்களை நினைத்து
அவளது இதழோரம் நெளிகிறது
உறங்கியும் விழித்தும்
பிறந்தும் இறந்தும்
அறியாத அவளுக்கு
எப்படிப் புரியும்
மாயை தரும் வேதனை?
வையவன்