Wednesday, September 21, 2016

திருப்பள்ளியெழுச்சி


திருப்பள்ளியெழுச்சி 
----------------------------------------------------------------------
உத்திஷ்ட்டோ உத்திஷ்ட்ட கோவிந்தா கருடத்துவஜா 
உத்திஷ்ட்ட கமலா-காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு 
திருமலையில் உறக்கம் 
கலைந்தான் ஸ்ரீவெங்கடேசன்.
எழுப்புகிறது இங்கிதமாக
நாத யோகினியின் கீதோபாசனை
நூற்றாண்டு கண்டுவிட்டதாமே!
காலம் என் கற்பனைதான்,
எனினும் எத்தனை சீக்கிரம்
கழிந்து போகிறது ஒரு கனவு
அன்னமாச்சார்யன் நினைவு வருகிறது;
கோவிந்தன் புன்னகை புரிகிறான்;
கவிதை கேட்பதும்,
கானவல்லியின் குரல் கேட்பதும்
எத்தனை இனிமை!
வந்துவிடுவார்கள் பரிசாரகர்கள்
வஸ்திரம் களைந்து
மஞ்சன நீராட்டி
லட்சோப லட்சம்
தரிசனங்களுக்குச் சித்தப்படுத்த .
ஆனால் தினம் உதிக்கும்போதெல்லாம்
இந்தக் குரலைக்கேட்டபடி
இன்னும் சில நூற்றாண்டு
கண்திறக்காமல் ரசிக்கலாம்
போல் தான் தோன்றுகிறது
- வையவன் 

ஏதோ சொல்லுகிறது ஒரு நாகலிங்க மரம்

                                                                           
எழுத்தாளர் ஆர். சூடாமணி 
ஏதோ சொல்லுகிறது ஒரு நாகலிங்க மரம் 
-------------------------------------------------------------
ஏதோ சொல்லுகிறது
ஒரு நாகலிங்க மரம்
பாரதி மூலம். 
பூத்தேன் பூக்கின்றேன்
பூத்துச் செல்வேன்
என் மலர்கள் போதும்,
என்னை வெளிப்படுத்த
வேர்விட்டு நின்றேன்,
வருத்தமின்றி வாழ்ந்தேன்,
வேட்கையின்றி விடைபெற்றேன்
சாலையோரச் சந்தடி
கடந்த மௌனமொழியில்
என்னமோ என்னென்னமோ
சொல்லாமல் சொல்லி
உத்தம ஜீவியம்
எப்படி மணக்குமென
உதிர்கின்றன மலர்கள்,
சூடாமணி நினைவுகளாய்.
இவைமட்டுமா இன்னும்
என்னென்னவோவா?
என்னவோ சொல்லுகிறது
ஒரு நாகலிங்க மரம்
-வையவன்
Thanks: The Hindu Metroplus 21-09-16