Wednesday, September 21, 2016

ஏதோ சொல்லுகிறது ஒரு நாகலிங்க மரம்

                                                                           
எழுத்தாளர் ஆர். சூடாமணி 
ஏதோ சொல்லுகிறது ஒரு நாகலிங்க மரம் 
-------------------------------------------------------------
ஏதோ சொல்லுகிறது
ஒரு நாகலிங்க மரம்
பாரதி மூலம். 
பூத்தேன் பூக்கின்றேன்
பூத்துச் செல்வேன்
என் மலர்கள் போதும்,
என்னை வெளிப்படுத்த
வேர்விட்டு நின்றேன்,
வருத்தமின்றி வாழ்ந்தேன்,
வேட்கையின்றி விடைபெற்றேன்
சாலையோரச் சந்தடி
கடந்த மௌனமொழியில்
என்னமோ என்னென்னமோ
சொல்லாமல் சொல்லி
உத்தம ஜீவியம்
எப்படி மணக்குமென
உதிர்கின்றன மலர்கள்,
சூடாமணி நினைவுகளாய்.
இவைமட்டுமா இன்னும்
என்னென்னவோவா?
என்னவோ சொல்லுகிறது
ஒரு நாகலிங்க மரம்
-வையவன்
Thanks: The Hindu Metroplus 21-09-16

No comments: