கண்டு முடித்துவிடு காணவிரும்பும் கனவுகளை
நேற்றை நோக்கிப்
பாய்ந்தோடுகிறது இன்று
நொடியையும் நிமிடத்தையும்
உதறி உதறி எறிந்தபடி
விக்கிரமாதித்தியனை
விரட்டிக்கொண்டு
சாலிவாஹனன் சவாரி
வருவது போல்
நாளை துரத்தி வருகிறது பின்னால்
காலக்குதிரையின்
காலடிக் குளம்போசை
கொண்டுவரும் செய்தியோடு .
இருப்பதற்குள் மீண்டும்
மறுகணம் ஒன்று உதிப்பதற்குள்
கண்டு முடித்துவிடு
காணவிரும்பும் கனவுகளை
பிறகு மறந்துபோகும்
வருவது எது?
போவது எது?
இருப்பதும் பிறப்பதும்
இறப்பதும் யார் யார்?
No comments:
Post a Comment