Tuesday, January 15, 2013

தரை தொட்ட வானம்

தரை தொட்ட வானம் 
மழை முத்தம் பெற்றதும்
மண் விடும் இன்பப் பெருமூச்சில்
என்ன ஒரு தாபம்!
என்ன ஒருமோகம்!
எப்படி எல்லாம்
மயக்கி மணக்கிறது
தரை தொட்ட வானம்
தூரம் வரையும்
தொடர் ஓவியத்
திரையிலும் ஊடுருவும்
சுகந்த வாசனை 


No comments: