என்ன விலை தந்துவிடுவீர்கள்
என் இதயக் கொதிஉலைவிட்டு
சிதறி வந்துவிழும்
என் கவிதைத் தீப்பொறிக்கு?
தன்னைத் தான் மறந்து
ஆடும் தாண்டவத்தின்
பாதச் சிலம்பொலிக்கு
அதன் நாதத் தொனி
எழுப்பும் சஞ்சாரச் சிலிர்ப்பிற்கு?
தகரமும் தகடுகளுமா?
கிழிகிற பட்டும்
கைமாறும் காகித நோட்டுகளுமா?
தங்கமே ஆனாலும்
என் கவிதை ததும்பித்
எட்டுகின்ற இன்பவிளிம்பைத்
தொட்டுவிட முடியுமா எதனாலும்?
என் இதயக் கொதிஉலைவிட்டு
சிதறி வந்துவிழும்
என் கவிதைத் தீப்பொறிக்கு?
தன்னைத் தான் மறந்து
ஆடும் தாண்டவத்தின்
பாதச் சிலம்பொலிக்கு
அதன் நாதத் தொனி
எழுப்பும் சஞ்சாரச் சிலிர்ப்பிற்கு?
தகரமும் தகடுகளுமா?
கிழிகிற பட்டும்
கைமாறும் காகித நோட்டுகளுமா?
தங்கமே ஆனாலும்
என் கவிதை ததும்பித்
எட்டுகின்ற இன்பவிளிம்பைத்
தொட்டுவிட முடியுமா எதனாலும்?
No comments:
Post a Comment