Sunday, January 13, 2013

இனிதினும் இனிது

இனிதினும் இனிது  
இனியது நினை
இனியது கேள்
இனியது பார்
இனியது செய்
இனிதே வழங்கு
இனியதை உண்
இனியதோடு இரு
இனிதாய் உறங்கு
இறுதிக்கு அஞ்சாது
உறுதியாய் இரு.
இனி மாறும் எல்லாம்
இருக்கும் காலம்
போகும் யார்
தடுத்து நிற்கும்
விதியின் வேகம் ?
ஈனக்கவலை உதித்தால்
உதறிப் போடு .
பிறந்தோம் இருந்தோம்
இதனினும் பெரிய
இனியது எது ?
பறவையின் பாட்டும்
காற்றின் கீதமும்
கேட்பதைக் கவனி.
சென்றுகொண்டிருக்கிறது 
வென்றுகொண்டிருக்கிறது
வாழ்வின் போக்கு






No comments: