கல் கொத்தும் கூட்டம்
கொத்தக் கல்தேடிப்
பிழைக்க வழி நாடி
கும்பல் கும்பலாகத்
திசை திசையாக ஓடுகின்றது.
எந்த யந்திரம் வந்து
ஜெயித்துவிடும் பசியை ?
வயிற்றைப் பஞ்சத்தை?
கொத்த ஒருவனும்
கூட்ட ஒருத்தியும்
அள்ளிச் சுமக்கச்
சிலருமாய் நடத்தும்
கஞ்சிப்போர்
நிற்காது ஒருநாளும்.
தறிமிதித்த நெசவாளி
தாறுமாறாய்க் காலம்
மாறிய போக்கைப் பார்த்தும்
ஊடுபாவை உதறவில்லை.
பொழுது எப்போது
விடியுமென்று ஏர் சுமக்கக்
காத்திருக்கும் உழவன்
உடம்பு வியர்வை
வற்றவும் போவதில்லை.
பாடுகள் நீங்கப்
பாடும் கவிஞன்
பணிக்கும் ஓயவில்லை.
பரவாயில்லை .எந்தப்
பயன் எதிர்பார்த்து
ஏர்முனை தேய்கிறது?
தறித்தாளம் தொடர்கிறது?
சுத்திமுனை கொத்துகிறது?
தொடரட்டும் வாழ்க்கை.
கொத்தக் கல்தேடிப்
பிழைக்க வழி நாடி
கும்பல் கும்பலாகத்
திசை திசையாக ஓடுகின்றது.
எந்த யந்திரம் வந்து
ஜெயித்துவிடும் பசியை ?
வயிற்றைப் பஞ்சத்தை?
கொத்த ஒருவனும்
கூட்ட ஒருத்தியும்
அள்ளிச் சுமக்கச்
சிலருமாய் நடத்தும்
கஞ்சிப்போர்
நிற்காது ஒருநாளும்.
தறிமிதித்த நெசவாளி
தாறுமாறாய்க் காலம்
மாறிய போக்கைப் பார்த்தும்
ஊடுபாவை உதறவில்லை.
பொழுது எப்போது
விடியுமென்று ஏர் சுமக்கக்
காத்திருக்கும் உழவன்
உடம்பு வியர்வை
வற்றவும் போவதில்லை.
பாடுகள் நீங்கப்
பாடும் கவிஞன்
பணிக்கும் ஓயவில்லை.
பரவாயில்லை .எந்தப்
பயன் எதிர்பார்த்து
ஏர்முனை தேய்கிறது?
தறித்தாளம் தொடர்கிறது?
சுத்திமுனை கொத்துகிறது?
தொடரட்டும் வாழ்க்கை.
No comments:
Post a Comment