Saturday, January 12, 2013

மற்றொரு நெல்மணி

மற்றொரு நெல்மணி 
ஒரு நெல்மணி நின்ற
கதிர் ஈர்க்கில் முளைத்தன
இரு நெல்மணிகள்

ஒரு கதிர் இரு கதிரானதால்
பூரிக்கிறார் பாடுபட்ட
உழவர்
அளக்க வரப்போகும்
கள்ள எடை
நியமன விலை
எடு கூலி
விற்பனை வரி
வாங்கிய கடன்
சுமக்கும் வட்டி
எல்லாமே அடிக்கப்போகும்
கொள்ளையை
மனப்பதராக தூ ற்றித்
தள்ளிவிட்டு
மாறி மாறி
வானையும் மண்ணையும்
பார்த்துப்  பார்த்து
மின்னி எழுகிறது புன்னகை.
வந்த விளைச்சலால்
ஏதோ ஓர் மற்றொரு
வயிற்றிற்கு வழங்கிய
 உத்தரவாதம் 
 பதர் போக்கிய மணியாக
மனசில் நிரம்புகிறது 
 எந்த விலைக்கு
நிகர் அந்தக்
கணநேரக் குதூகலம் ? 



No comments: