தேரோடும் ராஜபாதை
ஆம்! எனது பாதை அன்னை மணித்திருநாட்டின்
தொன்னந்தொன் பொருள் காலத்துத் தனிப்பாதை.
என்ன மிஞ்சிநிற்கும் இந்த இடர்க்காட்டில்?
இன்பமென்ற மின்மினி மின்னி மின்னி மறையும்
துன்பக் கானகத்துத் தொலையாப் பெருவழியிலெனத்
தேர்ந்து தெளிந்த ஞானப்பாதை .
வெந்ததைத் தின்று சேர்ந்ததைப் புணர்ந்து
வேகவைக்கப்பொருள் தேடி
கண்டதெல்லாம் கொன்று
களித்துக்கூத்தாடிய காட்டுமிராண்டிகளின்
காலத்தடம் விலக்கி
தேரோட்டம் போகிற ராஜபாதை
சுயத்தின் சொந்த ஒளி நாடிக்
கொடி நாட்டிய பாதை
சோர்வு பொருட்டில்லை
சோதனை வெருட்டாதெனத்
தேறித் தேடிக் கண்டறிந்து
கோபுர உச்சியிலேறி
ஏற்பீர் மானுடத்தீர்
தாரக மந்திரமெனக் கூவி
வழங்கிய வள்ளல்கள் பாதை
விலக்க முடியாது என்னை
இந்தப் பாதை விட்டு!
விலைக்கும் வாங்கிவிடமுடியாது
வேறு ஆளைப் பாருங்கள்
No comments:
Post a Comment