Monday, January 28, 2013

மீண்டும் கடலுக்கே

மீண்டும் கடலுக்கே 
வனங்கள் அழிந்துத்
தீனி சுருங்கி
விளைநிலச் சாலைக்கு
வருகிற வேண்டாத
விருந்தாளி யானைகளைக்
காட்டை அழித்துக் கவர்ந்து
விரட்டி அடிக்கிற
அதே மனிதனுக்கு
வழிதவறிக்கரையேறிய
ராட்சசச் சுறாமீனை
மீண்டும் கடலுக்கே
அனுப்புகிற கருணை
எப்படி சாத்தியம்?
மனிதமும் மானுடமும்
முரண்பாடுகளில் இணைவதாலா?  

No comments: