குயிலே குயிலே கூவிவிடு
குயிலே உனக் கனந்த கோடி
நமஸ்காரம்,
கூவு கூவு என்று குமரன்
வருகைக்குக் கூவியது
ஒரு பழைய பாட்டு
முருகன் தந்த
முத்தச் சுவையின்
எச்சக் கிறுகிறுப்பில்
எந்த வள்ளியோ
இன்னும் வெதும்புகிறாள்!
மாடுமனை போனாலென்ன?
மக்கள் சுற்றம் போனாலென்ன?
கிளியே,உன் குறுநகை போதுமடீ!
பதிலுக்கு ஒரு குமரன் பாட்டு
நாமும் தத்தளிக்கிறோம்
அப்போதைக் கப்போது
எவள் எவளோ
நம்மை அலைக்கழிக்கும்
மனக் கிறுக்கில்
குமரா குமரா வந்துவிடு
குயிலே குயிலே கூவிவிடு
எனக்கும் விடுதலை
தந்து விடு
No comments:
Post a Comment