Monday, January 14, 2013

நான் ஏற்றிய தீபம்

நான் ஏற்றிய தீபம் 
யார் வீட்டிலோ ஒலிக்கிறது
நான் செய்த புல்லாங்குழல்
யார் உலையிலோ வேகிறது
நான் விளைவித்த செந்நெல்
யார் வீட்டிலோ சிரிக்கிறாள்
என் வீட்டில் வளர்ந்த பெண்
நான் ஏற்றிய தீபம்
எனக்கு மட்டுமா உரிமை ?
நான் பேசும் மொழியில்
என் முன்னோர் எழுதிய கவிதை
லண்டன் ரயிலும்
ஜப்பான் ரயிலிலும்
மணிக்கொரு பயணம் போய்
மாற்றாரை மயக்கினால்
வழக்கா போடமுடியும்
காப்பிரைட் கேட்டு ?



No comments: