எத்தனை அடையாளங்கள் தொலைந்திருக்கும்
பலர் மிதித்துப் படிந்திருக்கும்
இந்தக் காலடித்தடங்களில்
எது அவளுடையது
எது அவனுடையது?
எத்தனை அடையாளங்கள்
தொலைந்திருக்கும் காற்றும்
அலையும் வருடும்
இந்தக் கரைமணல் வெளியில்?
எனக்குக் கணக்கு வழக்கு வேண்டியதில்லை
அலை ஓடிவந்து அழிக்கிற வரையில்
அதுவோ இதுவோ எனக்
காதல் இதயம்
பதைபதைக்கிற வேளையில்
ஒவ்வொன்றும் மற்றொன்றாய்
மயக்கிக் கலக்கும்போது
ஆதி பாதம்
பகவத் பாதமென
அருள்வாக்கு வழங்குகிறது
சமுத்திர ஓங்காரம்
காத்திருப்பது அதற்கல்ல
காத்திருக்க வேண்டியோருக்காக
பகவத் பாதம்
பலர் மிதித்துப் படிந்திருக்கும்
இந்தக் காலடித்தடங்களில்
எது அவளுடையது
எது அவனுடையது?
எத்தனை அடையாளங்கள்
தொலைந்திருக்கும் காற்றும்
அலையும் வருடும்
இந்தக் கரைமணல் வெளியில்?
எனக்குக் கணக்கு வழக்கு வேண்டியதில்லை
அலை ஓடிவந்து அழிக்கிற வரையில்
அதுவோ இதுவோ எனக்
காதல் இதயம்
பதைபதைக்கிற வேளையில்
ஒவ்வொன்றும் மற்றொன்றாய்
மயக்கிக் கலக்கும்போது
ஆதி பாதம்
பகவத் பாதமென
அருள்வாக்கு வழங்குகிறது
சமுத்திர ஓங்காரம்
காத்திருப்பது அதற்கல்ல
காத்திருக்க வேண்டியோருக்காக
பகவத் பாதம்
No comments:
Post a Comment