(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
கீதோபதேசம்
காசு தான்
நடத்திக்கொண்டிருக்கிறது
எல்லாக் கூத்தையும்.
நடித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்
விதிக்கப்பட்ட
வேடத்தில் .
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
மனக் கிணற்றின்
உள்ளே ஒரு
பழந்தவளை ஓலம்!
என்ன செய்ய?
கண்டத்தையே கண்டு
தின்றதையே தின்று
ஓடுவதன் பின்னாலேயே
ஓடி ஓட்ட வேண்டுமே நாளை!
கசக்காமலா போகும்
காசு கட்டளையிட்ட வேஷம்?
முன்பெல்லாம்
சீரகம் புளி மிளகாய்
பூண்டு வெங்காயம் என்று
ஒப்புக்காவது சில உபதேச
ஒப்பனைகள் உண்டு.
இப்போது சுத்த வெளிச்சம்
'கூச்சமே படாதே,
நான் இருக்கிறேன் '
காசு செய்கிறது
கீதோபதேசம்
வையவன்
கீதோபதேசம்
காசு தான்
நடத்திக்கொண்டிருக்கிறது
எல்லாக் கூத்தையும்.
நடித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்
விதிக்கப்பட்ட
வேடத்தில் .
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
மனக் கிணற்றின்
உள்ளே ஒரு
பழந்தவளை ஓலம்!
என்ன செய்ய?
கண்டத்தையே கண்டு
தின்றதையே தின்று
ஓடுவதன் பின்னாலேயே
ஓடி ஓட்ட வேண்டுமே நாளை!
கசக்காமலா போகும்
காசு கட்டளையிட்ட வேஷம்?
முன்பெல்லாம்
சீரகம் புளி மிளகாய்
பூண்டு வெங்காயம் என்று
ஒப்புக்காவது சில உபதேச
ஒப்பனைகள் உண்டு.
இப்போது சுத்த வெளிச்சம்
'கூச்சமே படாதே,
நான் இருக்கிறேன் '
காசு செய்கிறது
கீதோபதேசம்
வையவன்
No comments:
Post a Comment