Wednesday, July 25, 2012

அந்தந்த நேரத்து தீபங்கள்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
அந்தந்த நேரத்து தீபங்கள் 
குண்டுகள் வெடிக்கும் போர் முனையில்
பூச்சி எறும்புக்கடி பொறுத்து
அவன் காத்திருக்கும்போது
தொலைதூரக் கிராமத்து
அரசமரக் கோயில் மேடையில்
விளக்கேற்றுகிறாள் காதலி
அவளது மின்னும் கண்ணிமை
இங்கே தருகிறது உயிர் வெளிச்சம்
அருகாமையில் கேட்கும்
எதிரியின் நடமாட்டம் நினைவூட்டுகிறது
மறந்து மறந்து போன அவள் கோரிக்கையை
இந்தமுறை தவறக்கூடாது 

அவள் கேட்ட டார்ச் லைட்டை
வாழ்க்கை காத்திருக்கிறது
இந்த விடுமுறையில் அவன்
வீடு திரும்பினால்
வையவன் 

No comments: