(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
கிளைகள் விழுதுகள் பறவைகள்
பறவைகள் பாடிய கிளைகளில்
பாடல் ஓய்ந்து வருகிறது
ஒன்றிரண்டில் ஓரிரு தனிமைக் கூவல்கள்
மரம் உயர்ந்து ஓங்கி
மூத்து முதிர்ந்து விட்டது
கிளை விட்டு விழுது நாடி
இரை தேட வெகு
தாழ்வாக இறங்கி வரவேண்டிய ய
பறவைகள் வலிக்கும் இறக்கை
வேரிலே ஓய்வெடுத்து
விழுதுகளில் ஊசலாடும்
குரங்குகளை வேடிக்கை
பார்த்து விரைந்து
பறந்து விடுகின்றன
விருந்தாளிப் பறவைகள்.
மரம் ஞானம் எய்தி
ஒலி எழாத மௌனத்தோடு
திருப்தியுற்று விட்டது
கிளை உயர்ந்தால்
விழுது என்று ஊஞ்சலாட
வருகின்ற சிறுவர் கூட்டம்
அவ்வப்போது வந்து
அகன்று விடுகிறது
பறவைப் பாடல்
ஓய்ந்த சூனியத்தால்
வையவன்
கிளைகள் விழுதுகள் பறவைகள்
பறவைகள் பாடிய கிளைகளில்
பாடல் ஓய்ந்து வருகிறது
ஒன்றிரண்டில் ஓரிரு தனிமைக் கூவல்கள்
மரம் உயர்ந்து ஓங்கி
மூத்து முதிர்ந்து விட்டது
கிளை விட்டு விழுது நாடி
இரை தேட வெகு
தாழ்வாக இறங்கி வரவேண்டிய ய
பறவைகள் வலிக்கும் இறக்கை
வேரிலே ஓய்வெடுத்து
விழுதுகளில் ஊசலாடும்
குரங்குகளை வேடிக்கை
பார்த்து விரைந்து
பறந்து விடுகின்றன
விருந்தாளிப் பறவைகள்.
மரம் ஞானம் எய்தி
ஒலி எழாத மௌனத்தோடு
திருப்தியுற்று விட்டது
கிளை உயர்ந்தால்
விழுது என்று ஊஞ்சலாட
வருகின்ற சிறுவர் கூட்டம்
அவ்வப்போது வந்து
அகன்று விடுகிறது
பறவைப் பாடல்
ஓய்ந்த சூனியத்தால்
வையவன்
No comments:
Post a Comment