Sunday, July 29, 2012

நிர்மூட நிஷ்காம்ய அனுபவம்

வழிபாடு 
என் வழிபாடு துவங்குகையில்
எனக்குள் ஒரு கருங்கல் பாறை
நான்  எதிர்பாராத விதமாய்
கரைந்து துளித்துளியாக்  
கசியத் தொடங்குகிறது ;
அந்தப் பாறையைத் தாங்கும்
இதய சமுத்திரம் ,
கரைசல் துளிகளை
ஒவ்வொரு சொட்டாக
நிதானமாகச் சுவைத்துச்
சுவைத்துப் பருகுகிறது
ஒரு காரணமுமின்றிச்
சிந்தப்பட்டு
எந்த உதவியையும் கோராது
ஒரு முறையீட்டையும்
வெளியிடாது
கரைந்து போகிற பரவசம்
ஒன்றுக்காக மட்டும்
சிந்தப்படுகிற துளிகள் அவை.
நிர்மூட நிஷ்காம்ய
அனுபவம் அதுவென
இதய சமுத்திரமும்  அறியும்
எடையே அற்ற
இறக்கைகள் பெற்று
நெகிழ்ந்து உயர்ந்து
விரிந்து மேலேறி
பிறவியே எடுத்தறியா
லகு லயமான
பரப்பையே எனக்கு
அது பிரசாதிக்கின்றது
நான் பெயர் வைக்கிறேன்
வழிபாடென்று .
வையவன் 

No comments: