Sunday, July 29, 2012

மேலோடுகளின் உள்ளிருந்தது

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)  


சொல் 
சொல்லுக்கு உயிர் 
போய்விடுகிறது 
எண்ணத்தில் இருந்து 
வடிவம் பெற்று 
அண்ணாத்திற்கு  அது 
இறங்கி வருவதற்குள்!
நமக்குக் கிடைப்பது 
அதன் பூத உடல் 
வேர்க்கடலைத் தோல் 
மொச்சைத் தோல் 
போன்ற உறைமூடி 


சொல் சுவாசிக்கும்; 
நாடித் துடிப்பும் உண்டு 
ரத்தம் கூடச் சிந்தும் 
ஒரு வடிவம் பெறுவதற்கு 
அது பாடுபடும் வரை 
வந்து விழுந்ததும் 
அது மாண்டு போகிறது 
அதன் தைக் காணமுடியாத 
நாம் பெரிதும் 
அலட்டிக் கொள்கிறோம் 
பழக்க தோஷம் 
வையவன் 

No comments: