Wednesday, July 25, 2012

அளவெடுக்கும்போது

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
அளவெடுக்கும்போது 
எல்லாத் தையல்காரர்களும்
கவனமாகத்தான் அளவெடுக்கிறார்கள்;
மேனியின் மேடுபள்ளங்களில்
பொருந்த வேண்டியவை  எப்படிக்  கச்சிதமாய்
அமர்ந்து பொருந்த வேண்டும்
என்பதை யாரோ ஓர் ஆல்டரேஷன்
தேவைப் படாத
லேடீஸ் டைலர் தான்
அறிந்து வைத்திருக்கிறார்
ஆலய கோபுரத்தில்
கச்சிதமாக கலசத்தை
அமரவைக்கத் தெரிந்த
மேதைச் சிற்பி போல.
சூட்சுமக் கண்ணோட்டம்
வந்து விடாது எல்லோருக்கும்
வையவன் 

No comments: