Wednesday, May 22, 2013

ஓடியிருக்கிறது வண்டி

ஓடியிருக்கிறது வண்டி

உருண்ட சக்கரம்
போன திக்கில்
திரும்பித் திரும்பிப்
பார்த்து என்ன
சாதித்தோம்?
காற்றும் மழையும்
கழுவிக் கலைத்த
சுவடுகளைத் தவிர.

மீண்டும் மீண்டும்
பதிகின்றன  அதே சுவடுகள்
வெவ்வேறு வடிவில்
திரும்பித் திரும்பிப்
பார்க்கிறோம் பொழுதுபோகாமல்  .  
 

No comments: