Saturday, February 2, 2013

உயிர் ஒரு குழலோசை

உயிர் ஒரு குழலோசை 
உயிர் ஒரு குழலோசை
ஒலி இன்பதுன்ப
ஏற்ற இறக்கங்களோடு
நீந்தி நகர்ந்து நின்றுவிடுகிறது.
ஊதுகின்ற உதடுகளும்
ஒலியெழுப்பும் குழலும்
வெளிப்படுவதில்லைலேசில்  .
ஏதோ உண்டு பின்னணியில்
அது மட்டும் புரிகிறது
எனினும் எந்த வேட்கையில் ,
எந்த விளயாட்டுப்போக்கில்
எதை விரும்பும் விழைவில்
உயிரெனும் ஓசை எழுகிறது?
நாத பிந்துவாய் சில நாழிகை
ஓடியாடி நடமாடி ஏன் அடங்குகிறது?
விடை காணவரும்
சித்தர் கணம்
பத்தர் கணம்
முத்தர் கணம்
கணத்துக்குக் கணம்
கணக்கு தப்பி
எண்ணிக்கை மாறுகிறது.
மீண்டும் புரிகிறது
ஊதும் உதடுகளுக்கு
உத்தேசம் வேறேதோ!

No comments: