எஸ்ரா பவுண்ட்
கவிதைகளை எல்லாரும் எழுதுகிறார்கள்
சலிக்கிற அளவு
நீங்கள் எழுதியது குறைவு.
ஆனால் எவ்வளவு பெரிய மனிதர்
எஸ்ரா நீங்கள்?
டி.எஸ்.எலியட்டைக்
கைதூக்கிக் கரை சேர்த்துவிட
எத்தனை பெரிய மனசு
உங்களுக்கு?
ஒன்று மேலேறினால்
கீழிருக்கும் நண்டுகள்
அதன் காலைப்
பற்றிப் பின்னுக்கு
இழுக்கும் வளை நண்டுகளில்லாததா
உங்கள் ஊர்க் கிணறு?
எஸ்ரா எஸ்ரா எஸ்ரா
எத்தனை வலிய மனிதர்
நீ ங்கள்?
ஆர்.கே. நாராயணை
உலகறியச் செய்த
கிரஹாம் கிரீனைப்
போல?
கவிஞனை விட ரசிகனும்
ரசிகனை விட மனிதனும்
பெரியவன் என உணர்த்திய
உங்கள் சமிக்ஞைக்கு
ஒரு வணக்கம்
No comments:
Post a Comment