Saturday, February 2, 2013

மறுமான்ய குப்பத்தில்

மறுமான்ய குப்பத்தில் 
மறுமான்ய குப்பத்தில்
மக்காச் சோள வயல்களில்
கதிர் தலையாட்டும்போது
பாட்டியுடன்  துணை போன
வழிப் பயண ஞாபகங்களில்
வரவேற்ற மராட்டியர் வீட்டில்
விருந்தாக உண்ட
சோள ரொட்டியும்
எள்ளுச் சட்னியும்
தவறாது இடம்பெறுகின்றன.
காற்று இன்றும் பேசுகிறது.
அன்புக்கு மதம் இல்லை.
நேசத்திற்கு இனம் இல்லை.
 மனசுக்கு வேலியில்லை.
தலையாட்டித் தலையாட்டிச்
சொல்கிறது கதிர்.

No comments: