மறுமான்ய குப்பத்தில்
மறுமான்ய குப்பத்தில்
மக்காச் சோள வயல்களில்
கதிர் தலையாட்டும்போது
பாட்டியுடன் துணை போன
வழிப் பயண ஞாபகங்களில்
வரவேற்ற மராட்டியர் வீட்டில்
விருந்தாக உண்ட
சோள ரொட்டியும்
எள்ளுச் சட்னியும்
தவறாது இடம்பெறுகின்றன.
காற்று இன்றும் பேசுகிறது.
அன்புக்கு மதம் இல்லை.
நேசத்திற்கு இனம் இல்லை.
மனசுக்கு வேலியில்லை.
தலையாட்டித் தலையாட்டிச்
சொல்கிறது கதிர்.
மறுமான்ய குப்பத்தில்
மக்காச் சோள வயல்களில்
கதிர் தலையாட்டும்போது
பாட்டியுடன் துணை போன
வழிப் பயண ஞாபகங்களில்
வரவேற்ற மராட்டியர் வீட்டில்
விருந்தாக உண்ட
சோள ரொட்டியும்
எள்ளுச் சட்னியும்
தவறாது இடம்பெறுகின்றன.
காற்று இன்றும் பேசுகிறது.
அன்புக்கு மதம் இல்லை.
நேசத்திற்கு இனம் இல்லை.
மனசுக்கு வேலியில்லை.
தலையாட்டித் தலையாட்டிச்
சொல்கிறது கதிர்.
No comments:
Post a Comment