Monday, January 14, 2013

ஒரு கிராமத்து வீட்டின் மழைக்காலம்

ஒரு கிராமத்து வீட்டின்   மழைக்காலம்
வானத்தை வெட்டிக்கிழிக்கின்ற
வெறியில் விளையாடிய  மின்னல்கள்
அண்டத்தை உலுக்கி முகவரி கேட்ட இடியோசை
பட்டுப்பட்டென்று வெடித்த பல்புகள்
பற்றியெரிந்த ட்ரான்ஸ்பார்மர்
நிலம்நிலமென்று கட்டிக்காத்தது
போதுமென்று  புறப்பட்டுப் போன
மகராசி பாடையின் பின்
வயிறு வலிக்கக் கத்திச்சென்ற
மகள் கண்ணெதிரில்
போன மகராசியின்  ஒவ்வொரு கால்சுவடும்
கைப்பதமும் பதிந்து வடுப்பட்ட நிலத்தில் 
கதறக்கதறப் பெய்து  தீர்த்தது மழை
யாராரோ  உழன்ற    உளைச்சலாய்

எழுந்தது தவளைக் கூப்பாடு
போனவள் தவமிருந்தது இதற்கல்லவா?



No comments: