Friday, January 18, 2013

காதலென்பதோர் மாருதம்

காதலென்பதோர் மாருதம்
காதலென்பதோர் மாருதம் வீசவும்
காதலென்பதோர் மாருதம் வீசவும்
மோகமென்பதோர்  மணியோசை நடுங்க
நடப்பது  காணச் சாளரம் திறந்தாள்
திலகமிட்டு மையெழுதியத் திருமுகவல்லி.
தொழுது நின்றான் கைகூப்பி
எழுநிலை மாடத்தின் கீழ்ப்  புது மணவாளன்
உதிக்கும்  திருநாளின் திரைவிலக்கி,
உயரும்  கதிரவன் எதிரே.
தொழுகை எனக்கே என
புருவம் நெரித்தாள் முறுவல் மறைத்து.
பொன்கிரணம் பூசிய மஞ்சம் காட்டிக்
கண்ணிமைகள் சிமிட்டினான் காதலன் 

No comments: