Monday, January 14, 2013

நாற்காலிச் செருக்கு

நாற்காலிச் செருக்கு 
காற்றோட்டம் மாறினால்
பருவநிலை மாறுவது போல்

நாற்காலியின் கீழே
மடித்து வைத்த குடை
தலைக்கு மேலே
உயர்ந்து விரிகிறது
அனந்த சயனத்திற்கு மேலே
விரிந்த படமாக
நடுநிசியானால் என்ன?
நடுப்பகலானால்  என்ன?
 நான்கு கால்களின்
கூட்டணியால்
நிற்கிறது  நாற்காலி
ஒரு கால் முறிந்தாலும்
நாற்காலிச் செருக்கு
முடங்கி மூளிச் சப்தம்
கேட்கிறது.
குடை மடங்கி
பரிதாபக் காட்சியாகிறது
செருக்கின் வீழ்ச்சி 




No comments: