Thursday, January 24, 2013

தமிழாய்வு

தமிழாய்வு
சங்க உலைக்கடத்தில்
விழுந்திருக்கிற
சம்மட்டியடிகளுக்குப்
பஞ்சமே இல்லை.
அகம் புறம் என்று
அக்கு அக்காகப்
பிரித்துப்போட்டுவிட்டுப்
பின் கண்ணகி
மணிமேகலை
பட்ட பாட்டை நினைத்தால்
 அப்பப்பா..பதைக்கிறது நெஞ்சு.
இவ்வளவு இன்னல்கள்
தொடருமெனத் தெரிந்திருந்தால்
மதுரையை
எரித்திருக்கவே
மாட்டாளோ கண்ணகி?
ஒன்றும் செய்வதற்கில்லை
என்றுமுளது என் தமிழ்
தாங்கும் எல்லாவற்றையும்
வாழ்க வையகம்
வளர்க தமிழாய்வு.


No comments: