Friday, September 23, 2016

பௌர்ணமிகள் வீணாகின்றன

பௌர்ணமிகள் வீணாகின்றன
பௌர்ணமிகள் வீணாகின்றன
பால்வெள்ளை ஒளி நதியில்
திளைத்து நீந்தாமல்
எண்ண  இருள் பாலைகளில்
உயிர் தப்ப ஓடும் உலர்வனத்தில்
தட்டுத் தடுமாறித் தவிக்கிறது;
தலை உயர்த்திப்பார்க்காமல்
மயங்கி மருளும் மனித மனம்.
மனம் என்ற ஒன்றை
மயக்காமல் தாலாட்டும்
மகோன்னதம் உலவுகிறது
சிலமணி நேரம் விண்ணிலே
கண்ணுக்குப் படாவிட்டால்
யார் தவறு ?
-வையவன்
  

No comments: